Tuesday, February 7, 2012

காதல் அலைவரிசை






















எட்டாத தொலை ஊருக்குள்
                 இரவு பொழுதில்
                 எதோ ஒரு அலைவரிசை
                 காதுக்குள் இரைச்சல் கலந்து
                 பாய்ச்சும் இசையின் சுகமாய்...
காதல் இல்லை
                என்று சொன்னாலும்
                பரவாயில்லை
                அப்படியாவது என்னிடம்
                பேசு... சுகமே

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

எஜமானன் யாரையும்
                 அழைக்கப்போகாத போதும்
                 தொடர்பில்லா காட்டுக்குள்ளே
                 அலைவரிசை தேடும் கைபேசியாய்
நானும் நீ 
                  காதலிக்கப்போகாத போதும்
                  உன்னுடன் பேச போராடி 
                  தொற்றுக்கொள்கிறேன் பெருமையாய்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

தூரத்து  கிராமத்துகுள்ளே
                  கிடைக்கும் ஒற்றை 
                  அலையின் நுனி பிடித்து
                  தொடரும் அழைப்பைபோலே
நீ காதலிப்பாய் என்னும்
                  ஒற்றை நம்பிக்கையின்
                  நுனி பிடித்து 
                  நீடிக்குது இந்த உயிர்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்