Monday, February 27, 2012

துளிகள் - 1


















என் மொழியே! நீ எங்கே...
என் காகிதக் வயிறுகள் பசிக்கிறது.
கவிதை நாக்கு தவிக்கிறது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

இனிக்கின்ற கண்ணீர் காதல்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

கண்ணீரின் மழையாலே
ஏன் என் கண்ணத்து நிலங்கள்
வறண்டு போகுது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

ஆணுக்கு பெண்ணையும்
பெண்ணுக்கு ஆணையும்
கொடுக்கிறாள் காதல் தேவதை...
இதில் யாருக்கு கிடைத்தது வரம்?

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

இதழில் சொருகி
இதயம் வரை இறங்கும்
உருவமில்லா ஊசி அவள் முத்தம்


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

விஷம் கயிறு மலையுச்சி
இல்லாமல் தற்கொலைக்கு
முயற்சிக்கிறேன்...
உன்னை மறக்க முயல்கிறேன்...


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
 
காதல் என்னும் கல்
எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறது
சிலர் அதை செதுக்கி சிலையாக்கி
அழகு பார்க்கின்றனர்...
பலர் தன்மீது பட்ட சாணி
துடைக்கத்தான் அதை தேடுகின்றனர்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அடியே! என் கடிதம்
என் காதலின் நகல்
என்இருதயத்தின் மகள்
இதோ தன்
தந்தையையும் தாயையும்
சேர்க்கும் முயற்சி

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


உனக்கென்ன எளிதாய்
உடைத்து போய் விட்டாய்
இருதயத்தை
உடைந்த சில்கள்
நெஞ்சுக்கூட்டுக்குள்
 கிடந்தது கிழிக்குதடி

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உன் இருதயம் என்ன
என் முகப்புத்தக சுவரா?என் காதல்
விமர்சிக்கபடாத என் கவிதைகள் போல்
சலனமற்று சவமாகுது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அவள் விழிகள் இருக்கு
உள்ளே கோடி மின்சாரம் இருக்கு...
இனிமேல் எதற்கு அனுவின் பிளவு?

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

பட்டு பாவாடைத் தாவணியில்
அவள் வருகையிலே...
கவிதைகள் காகிதங்களில் எழுதப் படுகிறதா
இல்லை பட்டுத் துணியில் எழுதப் படுகிறதா
என்று ஐயம் வருகிறது....

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அவள் துப்பட்டா நிழல்
இருக்குமெனில்
12ல் 13 மாதம்
கோடையாக இருந்தாலும் சுகம்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்