Saturday, November 2, 2013

க்ஆ-த்அ-ல் – 5

“அ” எழுதி பழகிய சிலேட்டை
அம்மாவிடம் காட்டவென வரும்
பிள்ளையாய் உன்னிடம் பேச தொடங்குகிறேன்…

வரும் வழியில்
பையுள்ளையே அழிந்துவிட்ட சிலேட்டாய்
வார்த்தை வற்றி நிற்கிறேன்…

o

புத்தக நடுவில் வைத்த
மயிலிறகு வளராவிட்டால் என்ன…
வளர்ந்தது போல் தெரியுமே… அது போதாத?
மீண்டும் வைத்து
பூட்டிக் கொள்கிறேன் மயிலிறகை…

வைத்த மயிலிறகு நம்(என்) காதல்

o

கரடி பொம்மைகேட்டு
அழுது பார்கிறான் அந்த குழந்தை.
அடம்பிடித்தும் பார்க்கிறான்.
உண்ணா விரதம் இருந்தும் தோற்கிறான்…
கடைசியில் tom & jerry பார்த்தப்படியே தூங்கிப்போகிறான்.

கிடைக்காததால் அவனுக்கு
பொம்மையை பிடிக்காமல் போவதில்லையே…
வேறு எந்த பொம்மையையும்,
இது போல் பிடிக்காது அவனுக்கு.
அவ்வளவு தான் வித்தியாசம்.

க்ஆ-த்அ-ல் – 1 | 2 | 3 | 4

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்