Wednesday, November 20, 2013

கார்த்திகை இரவு


ஒரே ஒரு நிலா.
ஒரு சில நட்சத்திரம் போதாதோ?
என் கண்ணீர் துளிக்குள்
பிம்பம் விழுந்து. பிம்பத்திற்கு பிம்பம் விழுந்து.
என் கண் முன்னே நூறு விளக்கை
ஏற்றி வைத்திருக்கிறது இந்த இரவு.
o
மின்வெட்டு நாளொன்றில்
அழுக்குப் போர்வைக்குள்
அதைவிட அழுக்காய் கிடந்த
என் மார்பில் தலைவைத்துக் கிடக்கும் அவள்.
என்னை திரியாக்கி
விழி தீபம் ஏற்றி வைத்திருக்கிறாள்
எங்கள் ஒற்றை இருதயத்தின்
எட்டு அறையும் வெளிச்சமடையும்
அந்த ஒற்றை தீபம் போதாதோ.
தினமும் கார்த்திகை தான் எங்களுக்கு…
o
மருதாணி கைகள் கொண்டு
காப்பாற்றி விடுகிறாள்
அணையப்போகிற அந்த விளக்கை.
நானும் அணையப்போகிறேன்.
வருவாள் தானே… காப்பாற்ற…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்