Sunday, November 3, 2013

அவளலை

திரும்பிப் போகிற ஒவ்வொருமுறையும்
என்னைக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு
போகிறதந்த கடலலை

o0o

அடியே கடலே…
எல்லை கடந்தால்
நீயும் சுடுவாயோ?

o0o

பிரிந்து போகும் அலைக்காய்
கரைகள் அழுகிறதோ?
அழுகிற கரையின் கண்ணீர் துடைக்க
அலை விரல் மீண்டும் நீள்கிறதோ?

பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டிவிடுகிறது இந்த அலை

o0o

காதல் செய்யும் நேரம்.
எலியாட்ஸ் கடற்கரை.
கடல் குடித்துக்கொண்டிருக்கும் நான்.
என் இடது தோள் சாய்ந்து,
விழியால் என்னை விழுங்கிகொண்டிருக்கும் அவள்.

இருவரும் மாறி மாறி
அலை தெரித்தனர் என்மேல்…
திடீரென்று என்னைக் காணவில்லையென்றால்
எந்த அலை கொண்டு பொய் இருக்குமென்று
உங்களுக்கு தெரியுமல்லவா?

o0o

அடுத்த அலையில் கரையப்போகும்
கவலை இல்லாத குழந்தையாய் நான்
மணல் வீடு கட்டிகொண்டிருக்கிறேன்…

இன்னுமொன்று கட்டிக்கொள்ள
கரையில் இன்னும் மண் இருக்கிறதே…

o0o

கரை எற முடியாத
கடலலை திரும்ப வருவதை
நிறுத்திக்கொள்ளவேயில்லை

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்