Wednesday, November 20, 2013

கலைந்துவிடு கனவே

அது வெறும் கனவாய்மட்டும்
இருந்திருக்ககூடாதா?
கண்விழித்தவுடன்
அது முடிந்திருந்தக் கூடாதா?

திடுக்கிட்டு எழுந்து துழாவிப்பார்க்கையில்
தொலைந்து போன அந்த அன்புக்குரியவர்

பக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கக்கூடாதா?
இல்லை, சும்மா அழைத்தேன் என்கையில்
திட்டிவிட்டு அலைப்பேசியை துண்டித்திருக்கக்கூடாதா?

அது கனவாய் க(தொ)லைந்துவிட்ட நம்பிக்கையில்
மீண்டும் நான் உறங்கி இருக்கக் கூடாதா?

வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
இது ஒரு நீளமான கனவாய் போக.
விழித்து இந்த கனவை
முடித்துக்கொள்ள காத்திருக்கிறேன்.

பேராசையெல்லாம் இல்லை எனக்கு.
நிஜங்களில் சில கனவாகிப் போக வேண்டும்.
கனவுகளோ மொத்தமும் நிஜமாக கையில் வேண்டும். 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்