Thursday, September 8, 2011

கசடறக் கல்!


கல்வி!
வள்ளுவம் தாண்டி இச்சிறுவன் 
புதிதாய் எதுவும் 
சொல்வதற்கு இல்லை 

கற்றலும் 
கசடறக் கற்றலும் 
மட்டும் முக்கியமில்லை தோழா!
நிற்கவும் கற்றதிற்குத் தக...

கழுத்து நெரிக்கும் கல்வி 
அதை கழுதைகளாய் சுமந்த 
காலம் மாறி 
"PDF"யாய் ஒளிக் கற்றையாய் 
CDகுள்ளே கல்வி சிதையை
சிறைவைத்த 
ராவணர்கள் நாம் 

திறந்த நொடி 
சீறி வரும் இட்லிசட்டி 
ஆவி போல 
தோல் அறி பட்டதும் 
உலகம் காண வரும் 
ரத்தம் போல 
தயாராய் இரு.

வாய்ப்பு ஒரு நெருப்பைப்போல 
சரியாக கையாண்டால் 
குளிர் காயலாம் 
இல்லாவிடில் பறிபோகலாம் 

கல்வி 
சுவாசம் சேரும் oxygen போல 
எங்கும் இருக்கும் 
உனக்கு அனுபவம் கொடுக்கும் 
எவனும் தவற விடுவதில்லை 
சரியாய் சுவசிப்பதில்லை 

இளமையில்
கல்வி தொலைக்கும் சோம்பல்,
புத்திசாலித்தனம்
சந்தனக் காட்டுக்குள்ளே 
மூச்சை பிடித்துக் கொண்டு 
சுவாசிக்க மாட்டேன் என்னும் 
மடமையடா 

கற்போம் கற்பிப்போம்!


1 comment:

  1. //வாய்ப்பு ஒரு நெருப்பைப்போல
    சரியாக கையாண்டால்
    குளிர் காயலாம்
    இல்லாவிடில் பறிபோகலாம்//
    உண்மைதான் நன்பா

    //வள்ளுவம் தாண்டி இச்சிறுவன்
    புதிதாய் எதுவும்
    சொல்வதற்கு இல்லை//

    ஒன்றே முக்கால் அடியில் உலகை அழந்தவன் அல்லவா வள்ளுவன்!

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்