Friday, March 2, 2012

துளிகள் - 2

துளிகள் : 1




















எழுபத்தி இரண்டுக்கு மேல்
எண்கள் தெரியாத என் இருதயம்
எண்ணக் கற்றது சதங்களுக்கு மேல்
உன்னைப் பார்த்த அந்த நொடி...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

கொலைகள் செய்யும் 
ஒரே அன்பின் வடிவம் 
காதல்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

நான் காதலித்தபோது...
தற்கொலை இங்கே
குற்றம் என்றான் தோழன்...
இன்று அவள் பிரிந்த பிறகு,
மறந்துவிடு அவளை என்கிறான்.
கொலையும் குற்றம் தான்.
என்னை கொள்ள முயலாதே,
என்று சொல்லிட போனேன்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

no entry போடப்பட்டிருந்த
என் இருதயத்துக்குள்
அத்துமீறி நுழைந்தது நீ...
எனக்கு என் வலி என்னும் அபராதம்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

காதலும் அன்பு சிவமே
அதான் இங்கே
அழிவின் வேலையை செய்கிறது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

நீ  என்னை
காதலிக்காமலே...
நம் குழந்தை என் கவிதை...
உன் பிரிவில் இங்கே அனாதையாய்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~


காதல் ஒரு சாபம்...
இங்கே வரமாக கொடுக்கப்படுகிறது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

மன்மதனும்  காதலை எதிர்ப்பான்
அவன் தோழன்
காதலால் அழுவது பார்த்தால்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்