Saturday, May 18, 2013

ஈரமில்லாத மழை - 1

நனையாமல் எல்லோரும்
குடை பிடித்துக்கொள்ள
கொட்டுகிற மழை கண்ணீர்.
அவள் இருதயம் குடை பிடித்துக்கொள்ள
என் காதலும் கூட மழையாய் அழுதது…

திட்டும் அம்மாக்கு தெரியாமல் சன்னல் வழி
மழை அள்ளி குழந்தை ஒன்று விளையாட
மழை சிரித்தது… நானும்…
அவள், என் இருதயம் வைத்து விளையாடும் குழந்தை…

# o # o #

மழைக்கு தெரிவதே இல்லை
அதனால் உயிர்கொண்ட பூக்கள் பற்றியும்
அதனால் உதிர்ந்த பூக்கள் பற்றியும்

# o # o #

நனைத்தது மழையின் குற்றமும் இல்லை…
நனைந்தது என் குற்றமும் இல்லை…
காய்ச்சல் தண்டனையாவது ஏனோ?
காதல் காய்ச்சல் எனக்கு…

# o # o #

மழையும் நானும் அழுகிறோம்…
யாருக்கும் தெரியாமல்
எல்லோரையும் மகிழ்வித்து
மழையும் நானும் அழுகிறோம்…

# o # o #

குடை பிடித்து போகிறவர்களே
இது தான் கடைசி மழை…
தெரிந்து தான்
குடைக்குள் போகிறீர்களா?

# o # o #

பங்குனி இரவில்
கனவினில் வரும் மழையை
யாரால் தடுக்க முடியும்…
நான் கொண்ட நினைவை போலது…
என் இரவெல்லாம் தூறுது…

# o # o #

மழை சுதந்திரம் யாருக்கு இருக்கு?
நினைத்தவுடன் அழுதிட முடிவதில்லை

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்