Saturday, May 18, 2013

தண்டசோறு


என்னை தண்ட சோறு
என்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?

யாரோ குடித்துவிட்டு போட்டு போன
பாட்டில்களுக்கு நான் கர்தாவாகாமல் காரணம் மட்டுமானது
“கீழ் வீட்டு பெண்ணை காணவில்லையாம்” என்றதும்
அவனாகத் தான் இருக்கும் … என்று என் பெயர் அடிபட்டது
“வேலைக்கு போகலாம்ல, காசோட அருமை தெரியுதா” என்றவர்க்கு
தெரிந்ததால்தான் ஆறு ரூபாய் டிக்கெட் மிச்சமாக்க
10 கிலோமீட்டர் நடந்தது

என்னை தண்ட சோறு
என்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?
.
நான் பக்கத்து வீட்டு குழந்தைக்கு
சோறு ஊட்டுகையில் பூச்சாண்டியாக பயன்பட்டது…

என்னை தண்ட சோறு
என்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?

இந்த தண்ட சோறு(கள்) தோற்காமல்
அவர்கள் வென்றிருக்கவே முடியாதென்று

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்