Saturday, May 18, 2013

முடியா முடிச்சு


தாகம் எடுத்தவன் கண்ணில்
தடாகம் சிக்குகிறது…
யாரையும் நெருங்க விடாமல்
தடாகம் சுற்றி வேலி போட்டுகொண்டு
இறங்கி குடிக்கத்தொடங்குகிறான்…
தடாகம் தீர்கிறது…
தடாகங்கள் தீர்கிறது…
தாகம் மட்டும் தீர்ந்ததாய் தெரியவே இல்லை…

+ o + o +
சட்டென்று அடைத்து
உட்புறம் தாழிடப்படும் கதவுகள்

உள்ளே நுழைய அனுமதி இல்லை என்றோ
உள்ளே நுழைய அனுமதி இல்லாதவர் எவரோ
நுழைந்துவிட்டனர் என்றோ

சொல்லிவிட்டு சட்டென்று மூடிக் கொள்கிறது

 
+ o + o +
தன் கனிகள் அடிக்கடி திருடுபோவதாய்
கனிமரம் ஒன்று அழுது கொண்டிருந்தது…

அதன் கண்ணீர் பற்றி யாருக்கும் கவலையில்லை?

அடிக்கடி திருட்டு போகும் கனிகள் என்றால்
இந்த மரத்தின் கனிகள் எவ்வளவு சுவையோ!!
என்று எல்லா திருட்டு புத்தியும் கணக்கு போட்டது

கனிமரத்தின் கண்ணீர் நிற்கவும் இல்லை
கனிகள் திருட்டு போவது நிற்கவும் இல்லை
இங்கே ஏகப்பட்ட கனி மரங்கள் மட்டும்
முளைத்து கொண்டே இருந்தது…
+ o + o +
உள்ளே ஒரு பூனை
குறுக்கும் நெடுக்கும் அலைகிறது…

போகும் வழியில் பாலை தட்டிவிட்டு
குடித்து கொள்கிறது…

மீண்டும் குறுக்கும் நெடுக்கும் அலைகிறது

மீண்டும் அதன் வழியில்
பால் நிரம்பிய செம்பு ஒன்று…
மீண்டும் பாலை தட்டிவிட்டு குடித்து கொள்கிறது

மீண்டும் குறுக்கும் நெடுக்கும் அலைகிறது
பாலை திருடியதல்ல குற்றம்
பாலை அங்கே வைத்தது குற்றம்
பூனையை அலையவிட்டது குற்றம்


பின்குறிப்பு - இரவு எவ்வளவு சொல்கிறது… அதை கேட்காமல் உதாசினப்படுத்திவிட்டு எப்படி உங்களால் உறங்க முடிகிறது…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்