Sunday, August 12, 2012

பண மரம்

இருபத்தியோராம் நூற்றண்டின் மகாத்மாக்களே...
நீங்கள் உழல்களில் காட்டி
செய்தி தாள்களை நிரப்பும்
செய்த்திகளில் மட்டுமே நாங்கள்
கோடிகளை பார்த்ததுண்டு...

அந்த கோடிகள் எதுவென்று தெரியுமா?

அதோ டிஜிட்டல் போர்டு போக
வெள்ளை போர்டுக்காய் நிற்கும்
மீன்காரியின் காலில் கடுக்கும் வழி அது...

அன்லிமிடெடிலும் அடங்காதது
ஐந்து ரூபாய்க்கு கணக்கு பார்த்து
லிமிட்டெடு மீல்சிலே
அமைத்தியாகிப் போன கூலியின் பசி அது...

அங்கே சேர்த்தால் கற்றையாய்
டொனேசன் வேண்டும் ...
யூனிபார்ம்க்கு தொடங்கி புஸ்தகம் வர
எவ்வளவோ வேண்டும் என்று
கார்பரேசன் பள்ளிக்குள் சிறை வைக்கப்பட்ட
செருப்புத் தொழிலாளி மகனின் கனவு அது...

இந்த கடையில்
எழுபத்தி நாலு ரூபாய் ஐம்பது காசு
அந்த கடையில்
எழுபத்தி நாலு ரூபாய் இருபத்தி ஐந்து காசு
என்று கணக்கு பார்த்ததின் மிச்சம் அது...

பொண்ணு ஆளாயிட்ட
புகுந்த வீடு போட்டு போக
சீரு செக்க துப்பிருக்க என்று
மனைவின் கேள்வி நாக்கை புடுங்க
பொறுப்பு வந்து தூக்கிபோட்ட குடிப்பழக்கமது...

ஐம்பது  பவுணு போட்டு
தங்கச்சிக்கு கல்யாணம்...
பேரனோடு விளையாடி ஓய்ந்த
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அமைதியான காசி பயணம்...
குடுவாஞ்சேரியே ஆனாலும்
சென்னைக்கு மிக அருகில் அன்பான வீடு
என்ற நடுத்தர வாசிகளின் வாழ்க்கை அது...

நாங்கள் கணக்குகளில் கூட
கண்டிராத  கோடிகளை
நீங்கள் உழலிலும் வழக்கிலும்
பார்க்கவா தினம் எங்கள் ஓட்டம்...

நாங்கள் பணம் காய்க்கும் மரமல்ல
ஆனால் இனி அசையாமல் நான் இருக்கும் வரை
உங்கள் வீட்டில் கதவு சன்னலில் இருக்கும்
செத்த மரங்களும் பணம் காய்க்கும்
எங்கள்  உழைப்பில் வேர் பாய்ச்சி எம் உயிர் உறிஞ்சி...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்