Sunday, August 5, 2012

பாதை நீளமானது

அந்த பாதை மிக நீளமானது...
என்னோடு பலர் நடந்து கடந்து சென்றனர்...

முகம்தேரியாதவர் தான்
பழக்கமாகினர்...
தீடிரென்று கண் மறைந்தனர்...
நான் கவலையின்றி தொடர்ந்து நடந்தேன்...

சிலர் எனக்கு
வழி சொல்வதாய் சொன்னார்கள்
சிலர் என்னிடம்
வழி கேட்டு தொடர்ந்தார்கள்...

எங்களோடு  வந்தவர் சிலர்
திடிரென்று பிணமாய் சாய்ந்தார்கள்...
நாங்கள் நிற்கவே  இல்லை
கண்ணீரை அவர்களின் துணைக்கு விட்டுவிட்டு
தொடர்ந்து நடந்தோம்...

ஒரு நேரம் கூட்டத்தில் நடந்தேன்

 என்னோடு நடந்தவருக்கு
என் துணை கசந்து அழுத்துப் போகையில்
எனை பிரிந்து இன்னொருவரோடு சேர்ந்து
நடந்தனர் நாளை அதுவும் கசக்குமென்பதை மறந்து

சில நேரம் தனிமையில் கிடந்தேன்...

ஏதாவது என்னால் ஆகுமென்கையில்
என்னை சேர்த்து நடந்தார்கள்
அவர்களின் தேவை தீர்ந்து போகையில்
தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து நடந்தார்கள்

மீண்டும்  எழுந்து நடந்தேன்...

வழியில்  கண்டேடுத்தவைகளை
கூவி விற்றுக்கொண்டிருந்தான்...
தேவையை வாங்கியவர்
சுகமாய் நடந்தனர்...
தேவைக்கதிகமாய் வாங்கியவர்
சுமையோடு நடந்தனர்...

கண்ணில் பட்டதெல்லாம்
தன் சொந்தம் என்று
சுமை ஏற்றிக் கொண்டார் சிலர்...
நான் வெறும் கையோடே நடை தொடர்ந்தேன்

இரண்டு நாட்கள் போதாது
தெரிந்தும் வார இறுதியைகாட்டியே
ஐந்து நாட்களை ஓட்டும் ஒரு வாழ்க்கை போல
இது அது என்று எதையோ சொல்லி
தொடர்ந்து நடந்தேன்...
இந்த  பாதை மிக நீளமானது...

பி.கு. - இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்