Friday, August 3, 2012

ஈகை


அடுத்தவர் பெயர் கொண்ட அரிசி
பசித்தவர் பசி போக்கும் ஈகை

அவன் கண்ணில் தெரிந்த பசியை
இவன் உணர்த்தத்தான் விழைவு
கருணை விழும் இதன் பாத்திரத்தில்...ஈகை

அவள் முன்னாள் இவனிடம்
இவர் கேட்டுவிட்ட அதிர்ஷ்டம்
என்றுமே சில்லறை இல்லாத பையில்
இன்று பத்துரூபாய் இருக்கும்...ஈகை

பசி துளைக்க
உடல் உழைக்க வலிக்கையில்
இதை நீட்டி பிழைக்கும் சிறு(ல) உயிர்கள்...ஈகை

வரி சலுகையின் உதவியால்
உதவிக்கரங்களும் நிறையுது
வெளுத்து போன கருப்பு பணங்களால்...ஈகை

திருவிழாவில் தொலைந்து
முதலாளியின் பீடி சூடுக்கு பயந்து
சிக்னலில் கார்களின் கதவு தட்டும் ஈகை

தாவரங்கள் செய்த ஈகை
உன் தட்டில் உணவாய்
உன் மரணத்தால் உன் உடல்
நாளை செய்யும் ஈகை
ஆறடிக்கு உரமாய்
நடுவில் நீ செய்த ஈகை
உன் பிள்ளைக்கு புண்ணியமாய்
முடிவில் நீ செய்யும் ஈகை
இன்னொருத்தருக்கு கண்ணாய், உயிராய்

பாத்திரம் அறிந்து செய்வதல்ல
நீ செய்வது அந்த பாத்திரத்திற்கு தானா
அந்த பாத்திரம் பலனடைந்ததா 
என அறிந்து ஈகை செய்... நீயும் கடவுள்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்