Wednesday, August 22, 2012

யார் அந்த பைத்தியம்


பைத்தியக்காரர்கள்  எப்போதும்
சட்டையை கிழித்துக்கொண்டும்
தனிமையில் சிரித்துக்கொண்டும்தான்
இருப்பார்களா என்ன?
சடைபிடித்த முடியும்
சிரைக்கப்படாத தாடியும்
அழுக்கடைந்த நகமும்
வீச்சம் எடுக்கும் தேகத்துடந்தான்
இருப்பார்களா என்ன?

கிளிக்கப்படாத ஆடையில்
தான் இருந்தார்கள் ...
சுற்றத்துடன் இருந்தும்
சிரிக்கத் தெரியாதவராய்
தான் இருந்தார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

சிலநேரம் உதடுகளால்
மட்டும் சிரித்தாலும்
உள்ளுக்குள் சிடுசிடுத்து
தான் கிடந்தார்கள்...
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

கையொப்பம் இடு என்றால்
கணினியில் தட்டச்சும்
புத்திசாலியாக இருந்தார்கள்
மகன் படிக்கும் வகுப்பு
மறந்தவர்களாய் இருந்தார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

நண்பர்களை சந்திக்கையில்
வீட்டின் விலை வேலை
பற்றி பேசினார்கள்
அப்பரைசல் மேனேசரை திட்டினார்கள்
நட்பை மட்டும்
மறந்தவர்களாய் இருந்தார்கள்...
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

சொந்தங்கள் சந்திக்கையிலும்
பட்டு சரிகையின் அகலம்
புதுசாய் வாங்கிய காரு என்று
பகட்டை மட்டுமே பேசினார்கள்
தன்னை தானே
ஏமாற்றிக் கொண்டார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

சினிமாக்கள் போல் தங்கள்
காதலையும் கற்பனை செய்தார்கள்
கிடைத்த சுவை போதாமல்
கிடைக்காததை நினைத்து
வாழ்க்கையை கசப்பாக்கி கொண்டார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

இதோ இதை
எழுதிய படித்த
எதோ ஒருவராக இருந்தார்கள்
எல்லோராகவோ எதோ ஒருவராக  
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

2 comments:

  1. எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பைத்தியம்தான்!
    நன்று.

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்