Thursday, August 2, 2012

உனக்காய்

ராமனின் பாதகை கொண்டே
அயோத்தியை ஆண்ட பரதனின் தேசத்தில்
பாக பிரிவினைகள் சகோதரத்துவத்தை
பிளந்து போடுகிறது...
.
சிகாகோவில் உலகிற்கே
சகோதரத்துவத்தை சொல்லி கைதட்டு வாங்கையிலே
அவன் தேசத்தில் அது
பணம் ஆசை கோபம் என்னும் பெயரில்
கொலை செய்யப்படுகிறது...
.
சகோதர பந்தம் போடா வேண்டிய
ரக்ஷை கயிறுகளால்
காதல் சொல்லி வருபவனை
கட்டி போடும் ஒரு கலாச்சார சிதைவு...
.
அன்பு மட்டும் எப்படிதின்றாலும்
எவ்வளவு தின்றாலும் திகட்டாதது
அனால் நீங்கள் மட்டும் தின்றால்
வயிறு வலிக்கும் பகிர்ந்து உண்போம்
இந்த சகோதரத்துவம் வழி
.
கடவுள் கொடுக்க மறந்த உறவை  
வாழ்க்கை நமக்கு கொடுத்திருகிறது
.
அனைவருக்கும் சகோதர தின நல்வாழ்த்துக்கள்






No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்