Thursday, August 30, 2012

makeup போட்ட மலரே


இரண்டு விழியாலே
அள்ளி மென்றாளே
அழகாலே விழியுள்ளே
கிள்ளி வைத்தாளே
இதய  சுவரெல்லாம்
பரண்டி போனாளே
லப்டப் மறந்து அவள்  பெயரை
என் இருதயம் புலம்ப செய்தாளே

-oOo-

make up போட்ட மலரவள் பார்வை
என் single என்னும்
டுலெட் போர்டை 
தூர எறிந்ததே
என் பெயர்தான்
அவள் பெயரிருக்கும்
என் மாமன் பெயருக்கு
நாளை ஓய்வு தருமே...

-oOo-

சூரியன் உதித்தல்ல,
என் நாட்கள்...அவள்
மின்கடித்ததில் விடியுதே
சொல்லாத என் காதல்
தொண்டைக்குள்ளே
தினம்  மடியுதே...

-oOo-
 
சொல்லாமல் மெல்லாமல்
என் காதல், குரவளையில்
முள்ளாய் குத்துதே
நெஞ்சுள்ளே கட்டெறும்பாய்
உசுரை கடித்து குதறுதே

-oOo-

அவள்  பதில் வர தாமதித்தால்
நான்  படும்பாட்டை
refresh பொத்தான் மட்டுமே அறியும்
காதல் சொல்லி மறுத்திடுவாளோ
தாங்கும் இருதயம் இல்லை
எனக்கு  மட்டுமே தெரியும்

-oOo-

இருந்தும்
அனுப்பாத கடிதங்களை
நீ படித்தும் புரியாத கவிதைகளை
பத்திரப்படுத்திக் கொள்வேன்

பொம்மை  கேட்டு வாங்கி தர
மறுக்கும் உன்னிடம்
கோபித்து சாப்பிடாத நம் மகளை
உன்  பிடிவாதமீது  நான் கொண்ட
பயம்  சொல்லி சந்தபடுத்த தேவைபடுமடி...

பின்குறிப்பு - அவளிடம் சொல்ல தைரியமில்லாத ஒரு காதல் ... நிச்சயமாய் ஒரு தலை காதலில்லை[அவ்வளவு நம்பிக்கை]

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்