Friday, August 24, 2012

ஏ(ன்)மாற்றம்?





டாஸ்மாக்கின் கல்லா காசுகள்
பாதி சொல்லிய காரணம்...
ஏமாற்றிய காதலென்று

தற்கொலை பாறைகளில்
விழுந்தவரின் எதிரொலி
விஷம் கொண்டவர் சொல்லாமல்
முழுங்கிய வார்த்தைகள்
தூக்குக் கயிறில் நெரிக்கப்பட்டு
கொலையுண்ட வேதனை
என்று எல்லாம் சொல்வதுவும்...
ஏமாற்றியதாய் காதலைத்தான்

சிரைக்கப்படாத தாடிகள்
சிதைக்கப்படும் மணிக்கட்டுகள்
வீசப்படும் அமிலங்கள்
எல்லாம் குற்றம் சொல்வதுவும்
ஏமாற்றியதாய்  காதலைத்தான்

காய்ந்து போன மாடே
பசும்புல் பசிக்கண்ணாலே
வைக்கோல் பார்த்த அவசரத்தில்
மேய்ந்து தொலைத்தாய்...
புல்லின் ருசி காணாமலே
நீயே உன்னை ஏமாற்றியது தெரிகிறது
உன் கல்லிருதயத்தில் வேர்விட்ட
ஆசை செடி வெளிவரவோ மறுக்கிறது...

அடுக்கடுக்காய் குற்றமெல்லாம்
உன்புறமென புரிகையிலே
ஏமாந்த நீ ஏமாற்றியது காதலென்று புலம்புகிறாய்...

நீ ஏமாந்தது உண்மைதான்
அனால் ஏமாற்றியது காதலல்ல
காதலை குற்றவாளியாக்கும்
உன்னை பெற்றெடுத்தது மட்டும் தான்
காதல் செய்த குற்றம்...
உலகிற்கு அது கொடுத்த ஏமாற்றம்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்