Monday, August 27, 2012

மாறிப்போன அர்த்தம்

புகையும் குடியும் கேடு...
அவன் எந்த கேட்ட பழக்கம்
இல்லாத நல்லவன் என்றான்...

அவனோ  அடுத்த தெருவுக்கு
பூமியை மாசக்கி பைக்கில் போனான்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

எந்த பொண்ணையும் அவன்
ஏறெடுத்து பார்த்ததில்லை
நல்லவன் என்றான் 

அவன் பார்ப்பதெல்லாம்
ஏறெடுத்து பார்க்கும் உயரத்தில்
இல்லை என்பதை யாரறிந்தார்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

அரசியல் - அனாவசியம் பேசி
நேரம்  வீணடிக்க மாட்டான்
நல்லவன் அவன் என்றான்

அரங்கேறும் அவலங்களுக்கு
பின்னால் அவன் போடாத
ஒரு ஓட்டும் இருந்தது

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

... o ...

இருக்கும் இடம் தெரியாது
குனிந்த தலை நிமிராது
ரொம்ப நல்ல பொண்ணு அவ என்றான்

அதெல்லாம் படிதாண்டி
தெரு கடக்கும் வரை மட்டும்தான்
என்று தெரியாமல்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

அப்பாட்ட காசுக்கு நின்னதில்ல
வீணாக போனுக்கு ரீச்சார்சு பண்ணினதில்ல
ரொம்ப நல்ல பொண்ணு அவ என்றான்

அதுக்கெல்லாம் சேர்த்து
ஒரு லூசு அவங்க அப்பா பையில்
கைவைப்பது தெரியாமல்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

என் சொல்பேச்சு கேப்பா
நல்ல மருமக என்றா

இடுப்பு கொத்து சாவி
இவா இடுப்பு வரும் வரைதான் அது
என்று தெரியாத மாமியா

என்ன மகா மாதிரி பாத்துக்கிட்டா
நல்ல மாமியா என்றா

இவா போட்டு வந்த நூறு பவுனின்
போதை தீரும் வரைதான் அது
என்று தெரியாத மருமக

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

முட்டாள்களின் தேசத்தில்
அறிவாளி  முட்டாளாகவே பார்க்கப்படுவான்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்