Thursday, August 16, 2012

நீ... நான்... நாம்...

வீதி எங்கும்
தர்மத்தின் பிணங்கள்
தேசம் தோறும்
நீதி கற்பழிக்கபட்டிருந்தது
வீடு தோறும்
எதிர்காலம் அழுது ஓலமிட்டது
.
ஓசையின்றி எல்லாம்
நடந்துகொண்டே இருந்தது
நடத்தியவர் யார்?
 .
தேடிய எல்லோர் இடுப்பிலும்
உலர்ந்த ரத்தக் கறையுடன்
ஒரு கத்தி மறைக்கப்பட்டிருந்தது
செத்த எந்த தர்மத்தினுடையதோ அது?
 .
பாதி பேர் முகத்தில் முதுகில்
பிரண்டப்பட்ட நகத்தின் தழும்புகள்
கற்பழிக்கப்பட்ட எந்த நீதியின்
தப்பிக்கும் முயற்சியின் தோல்வியோ அது?
.
எதோ ஒரு கொலைக்கு
செய்ய சொல்பவனையும்
செய்து முடிப்பவனையும் தவிர
மீதமுள்ளவரும் காரணமாய் இருப்பதால்
எல்லோர் கரங்களிலும் ரத்தக் கறை
 .
இறங்கிவந்த அவதாரப் புருஷன் அவன்
இருந்தும் அவன் சட்டைப் பையில் இருக்கும்
பத்தில் எட்டு நோட்டுகள் கருப்பாய் இருந்தது
.
பசி ஆற்ற மட்டும் அல்லாமல்
பகட்டும் காட்டி இறங்கிடும்
என் பாதிவேளை உணவுகள்
களவாடப்பட்டதாகவே இருந்தது
சில நேரம் இலைகளில்
சிலநேரம் செரித்த மலங்களில்
 .
அன்பின் அரண்மனை
என்று இன்று நீ பிதற்றுவது
நேற்று ஒரு கொலையின்
களமாய் இருந்திருக்கலாம்
தெய்வம் வாழும் கோவிலென்பது  
மனிதம் எறிந்த சுடுகாடாய் இருந்திருக்கலாம்
.
தட்டிக் கேட்க்கும் முன் என்னை பார்த்தேன்
என் கைகளிலும் ரத்தக் கறை
என் முதுகிலும் நகத்தின் தழும்பு
என் பைகளிலும் கருப்பு நோட்டுகள்
எந்தன் இடுப்பிலும் ஒரு கத்தி ரத்தக் கரையுடன்
என் வீட்டிலும் எறிந்த பிணவாடை
என் உணவெல்லாம் ஒருவரின் பசி வாடை
 .
ஊரோடு ஒத்து வாழ வேண்டுமல்லவா?
களவாடப்பட்டதை உண்டு
கத்தியை கூர் தீட்டி
இடுப்பில் மாட்டிக்கொண்டு
மீண்டும் தொடர்ந்தேன் மறு நாளை
 .
எவனோ செய்கிறான்
எவனோ துடிக்கிறான்
என்னை தீண்டாத வரை
அடுத்தவனை கொள்ளும் பாம்பை
அடிப்பதும் பாவம் இந்த தேசத்தில்
 .
பெருமைபடுகிறேன் மாபெரும் தேசத்தின்
குடிமகன் என்பதில் ...
இத்தனை இருந்தும் 66  ஆண்டுகள்
காப்பாற்றிவிட்டதல்லவா 
ஆங்கிலையன் விட்டுசென்ற சுதந்திரத்தை
 .
காந்தி சிரித்துக்கொண்டே களவாகட்டும்
ராமன்கள் எல்லாம் ராவணாகட்டும்
கண்ணகி தேசத்தில் கற்பு விலையாகட்டும்
டெஸ்ட்டுபில் விளைந்து பசி தீரட்டும்
66  ... 6000 ஆனாலும் தேசம் வல்லரசை நோக்கி
என்று பொய் உரைக்கட்டும்
தேசம் நாசமாய் போகட்டும்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்