Wednesday, April 18, 2012

உறங்காத இரவுகள் - 3

உறங்காத இரவுகள் - 1 | 2


ஆங்கிலம் என்ன மன்மதன் மொழியா?
ஆண்கள் கடக்கும் பெண் கூட்டமும்
பெண்கள் கடக்கும் ஆண் கூட்டமும் 
அதையே பேசுகிறது...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

இடப்புறம் காதலி நடக்க,
நடந்து போறவன்
வலப்புறக் காது செவிடனாகிறான்

அதனால் தான் அறிவு 
கூப்பிட்டும் பாராமல் போகிறான்...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

காதல்  ஒருக் கொசுக்கடி இரவு...
எந்த சக்தி கொண்டும் 
அது கடிப்பதை தடுக்க முடியாது...

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

என் காதலை சொன்னேன்
உளறல் என்று போனாய் நீ...

இன்று உளறித் திரிந்தேன்
கவிதை என்கிறது உலகம்

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

வாழ ஆசைப்பட்டு எல்லோரும்
குடிக்கும்  விஷம் காதல்

+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.+.

சக்தியை அழிக்கவோ ஆக்கவோ
முடியாதென்றது ஆற்றல் அழியா விதி...

நான் காதலை ஆக்கிவைத்தேன்,
நீ அதை அழித்து விட்டாய்...

என் வாழ்வை மட்டுமல்ல
அறிவியலையும் போய்க்கச் செய்தோம்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்