Sunday, April 1, 2012

பெற்றுக்கொள்ளாத கடிதங்கள்

உன்னால் என் பாதைகள்
நான் அழுத கண்ணீரால் சகதியாச்சு
தாடிவச்ச தாமரைய
என் உடம்பும் அதில் மிதந்து போச்சு

அடி சர்க்கரையே! காதல் வாயால்
உன்னை  தின்றதின் விழைவு பார்
என் கண்களுக்கு நீரிழிவு நோய்...

காதலில்  மட்டும் அரை வைத்தியனாக
ஆயிரம் பேரின் மரணம் தேவைபாடுவதில்லை
இதோஎன் ஒருவனைக் கொன்றுவிட்டு
காதலின் மருதுவச்சியாகிறாள்,
வலி என்னும் தீராத நோய் தருவதற்காய்...

எந்த வார்த்தை கொண்டு
என் காதலை உனக்கு புரிய வைக்க
என் காதலின் எந்த ஆழம் காட்டி
சாதியைவிட என் காதல் உயர்வென்று
புரியாத உன் பெற்றோருக்கு உணர்த்த...
என்னிடம் மிஞ்சி இருக்கும் ஒரே மொழி
"நான் உன்னை காதலிக்கிறேன்"

அவள் நினைவுப் பூனை
இரவு பகலெல்லாம் என் இருதயத்துக்குள்
உருட்டித் திரிகிறது... எதோ ஒரு பானையை
இதோ  கண்கள் வழி, வீனாகுது
கண்ணீராய், என் உயிர் பால்...

என் கண்ணீரெல்லாம் முகவரி தெரியாமல்
என் கண்ணத்து அஞ்சல் பெட்டிகுள்ளயே
எழுதிக் கிடக்கும் என் காதல் கடிதங்கள்...
உன் உதடுகள் தான் அதன் முகவரிகள்
முத்தக் கையெழுத்திட்டு பெற்றுக் கொள்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்