Monday, April 9, 2012

மூடிக்கிடப்பவைகள் - 4

மூடிக்கிடப்பவைகள்  - 1 | 2 | 3
மருமகள்களாய் பெண்கள்
தாங்கள் வடித்த கண்ணீருக்கு
தான் மாமியார் ஆனதும்
மருந்திட ஆசைபடுவதைவிட
பழிவாங்கத்தான் துடித்துக்கிடக்கிறார்கள்
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

ஒவ்வோர் அலுவலகங்களில்
எழுபத்திஐந்து விழுக்காடு உயிர்கள்
வெட்டியாய் இருக்கிறது...
மீதி இருபத்திஐவரின் வியர்வைகள் தான்
இவர்களுக்கும் ஊதியம் கொடுக்கிறது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என்று வியர்வை, உழைப்பால் வராமல்
வெறும் வெட்கையால் வந்ததோ...
அன்றே உலகம் அழிந்துவிட்டது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என்று தன் உரிமையால்
அவனை அதிகார நாற்காலியில் உட்காரவைத்து
இன்று அவனை பார்க்க வெயிலில் காய்ந்தோமோ
அவன் வாகனம் போக நெரிசலில் நசிந்தோமோ
உன் கையில் கொடுக்கப்பட்ட மந்திரக்கோல்
முழுக்க பழுக்க காய்ச்சிய இரும்பு போல்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்