Sunday, April 22, 2012

உறங்காத இரவுகள் - 4

உறங்காத இரவுகள் - 1 | 2 | 3


பெண்களின் இருதயம்
அமுதை தரும் பாற்கடல் தான்...

உள்ளே நஞ்சும் இருக்கும் மறவாதே!!


எந்த நீலகண்டன் கழுத்தில் சுமப்பனோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவள் முகம்
ஒருக் கவிதை அரங்கம்

நொடிக்கொரு கவிதை

அரங்கேறிக் கொண்டே இருக்கும்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் எல்லா கூகிள்-களிலும்
"நான்" என்னும் தேடலுக்கு

"நீ" என்னும் விடைதான்...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் முகப்புத்தகம் தேடல் இடம்
சந்திக்கும் ஒரே சவால்

"உன் பெயர்" ...

இதுவரை உன்னைக் கண்டுபிடிக்காமல்
அது சவாலாகவே இருக்கிறது... 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
28 வயது ஆணிடம்
உன் வருங்கால மனைவி
எப்படி வேண்டும் என்று கேட்டால்...

பெயரைத் தவிர

அவன் சொல்லும் எல்லாவற்றிலும்
அவன் பழைய காதலி தான் இருப்பாள் அடையாளமாய்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்லா படி
நல்ல வேலையை பிடி
கை நிறைய சம்பாதி...
பின் நீ தேடிய பெண்
உன்னை தேடி வரும்
என்றது சமுகம்...

கேட்டேன் சமத்தாய்...

இதோ சொல்லாத என் காதல்
செல்லாமல் போனது...
அவள் அவனுடன் commited முகப்புத்தக வாசகத்தில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெண் பெயரை வைத்து
முகப்புத்தகத்தில் புலம்பினாலும்

அதற்கும் ஒரு கூட்டம் கைத்தட்டும்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்