Monday, June 11, 2012

காத்திருந்து காய்ந்து போவோம்

தங்கம் மண்ணில் கிடக்கும் 
வெறும் உலோகம் வகை
என்றுமட்டுமே அறிந்த உலகம் அது
.
காசுகளை பார்த்தால்
காகிதங்கள் என்று மட்டுமே
சொல்லத் தெரிந்த தேசங்கள் அங்கே
.
கிரகம் முழுக்க
பலர் பசியின் வாசல் பொய்
மரணத்திற்கு விருந்தாகும் வேளையில்
.
சிலருக்குத்தான் சிக்குகிறது 
கொளுத்த தங்க முட்டையிடும் சேவல்
அறுத்து சமைத்து ருசி பார்க்காமல்
தினம் முடிவில் குண்டுமணி அளவிளிடும்
தங்கத்திற்காய் காத்துத்தான் கிடக்கிறார்கள்
ஒரு சானை பசிக்கப் போட்டு...
.
முட்டையிட்டு முட்டையிட்டே
அந்த சிகப்பு கொண்டைக்காரி
காணமல் கரைந்து போகிறாள்...
இப்பொழுதான் பசியை உணர்ந்தவர் போல்...
குத்தி கிழித்து பற்றி இழுக்கும்
பேய் நகம் கூர் தீட்டி
ஒற்றைக் கடியில் ஆழம் பாய்ந்து
உயிரின் உள்ளே உறங்கும் சாரையும்
வெளி எடுக்கும் பற்களை பதம் பார்த்து
பாய்ச்சுகிறார்கள் செல்லாமல் மிஞ்சி இருக்கும்
தங்க முட்டைகளின் மேல்...
.
பாவம் பதம் பார்த்ததும் வீண்
கூர் தீட்டியதும் வீண்...
பசியிக்கே ருசியாகிப் போகிறார்கள் சிலரும்...
கவிஞர் லதா மகன் சொல்லும் பிறழ்வு இலக்கணத்தில் எழுத முற்பட்டக் கவி இது 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்