Sunday, June 3, 2012

பிறந்த எட்டாவது சுவரமே...


(22)ஸ்ருதி (7)ஸ்வரம் (35)தாளம் (108)ராகம்
என்று நான்கு தாய் பெற்றெடுத்த இசை...

ச - ரி - க - ம - ப - த - நி என்று கர்நாடகமாய்
ச - ரீ- க - ம - ப - த - நி என்று ஹிந்துஸ்தானியமாய்
டூ - ரீ - மி - ஃபா - சொல் - ல - சி என்று மேற்கத்தியமாய்
மூன்று சுவர் சிறைக்குள் சிறை இருந்த இசை


20ஆம் நூற்றாண்டில் பண்ணையபுறத்து 
புல்லாங்குழல் தென்றலால் இந்த இசைக்கு
சிறகு முளைத்தது சிறை கலைத்தது...

இவனால்
பொதிகை  மூங்கில் ஜாஸ் பேசியது
தஞ்சாவூர் தவில் ராக், மெட்டலாய் உறுமியது
உறுமியும் பறையும் பாப் பாடியது

பாடறியாத  படிப்பரியாத பாமரனின்
நாட்டுப்புறம் எட்டுக் கட்டை கட்டி
ஏழு சுவரம் ஏற்று மேடை ஏறியது இவனால்...

மேற்குபுறம் மட்டுமே மழை தந்த
பல இசைத்தென்றல்...
இசைஞானியின் ஹார்மோனியத்தால்
கிழக்குபுறம் திசை திரும்பியது...


லண்டன் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில்
முழு கீதம் அமைத்த முதல் ஆசியன் இவன்...
அதனால் தான் ராக்கம்மாவுடன் சேர்ந்து
இந்தியாவுடன் 155 நாடுகள் கை தட்டியது...

மொசார்ட், ஜோஹானன், பீத்தோவன்
என்ற மூன்று துரனர்களின் ஏகலைவன் இவன்...
அவர்களின் திறம்  விரலை
மாணவதட்சனையாய் பெற்றவன் இவன்...

எந்த ஒரு தொழில்நுட்ப வசதியின்றி
இந்த ஒரு தென்றல் உண்டு பண்ணிய
மாற்றத்தை, இந்த உலகத்தில்
பல புயல்கள் உண்டு பண்ண முயற்சித்து கொண்டிருக்கிறது
புதுப் புது நுட்பத்தின் துணை கொண்டு...

அந்த முயற்சியில் தீர்ந்து கொண்டிருக்கிறது
எங்கள் இசை பசி...
இருந்தும் நீ உண்டாக்கிய ருசி இல்லை...

இசைஞானியே... பாமரக் கவியே... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 [02/06/2012]

தொடர்புடைய கவிதை +



No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்