Friday, June 8, 2012

கண்டேன் அழகை

நான் பார்க்கவில்லை என நினைத்து 
ஓர விழி பார்வையாலே 
எனை நனைக்கையில்தான்
கயல் விழியாள் கார்விழி பேரழகு ...
.
நான் பார்ப்பதை தெரிந்த பின்பு 
கலைந்துகிடக்கும் அவள் முடி சரிசெய்து 
தன்னை அழகாக்கி கொள்ளும் 
அந்த பதட்டத்திலும் அவள் ஓரழகு ...
.
அவள் போகும் வழி நெடுக
நான் தொடர்ந்து பின் தொடர
திரும்பிப் பார்க்கும் அவள்
நீ என்ன இந்தப் பக்கம்
என்று முறைக்கிறாளா?
இப்படி போகணும் என் வீட்டுக்கு
என்று வழி சொல்கிறாளா?
குழப்பமும் இங்கே தனி அழகு ...
.
வேண்டுமென்றே தாமதமாய் வந்து 
வராத என் இடத்தில் என்னைத் தேடும் 
அவள் தேடலை ரசிக்கையில் 
அவள் சோகமும் ஓர் சுக அழகு ...  
.
தினமும் பார்க்கும் நான்
பார்க்காமல் அன்று நடிக்க
என் பார்வையினில் படுவதற்காய்
அலைபாயும் அவள் மனதும்
காதலும் முழு அழகு ...
.
உன்னில் இவ்வளவு அழகை
கண்டுபுடித்த எனக்கு
தாடி அழகாய் இருக்கும்
நான்  அழுதால் அழகாய் இருக்கும்
என்று கண்டவள் நீயடி...

1 comment:

  1. காதல் சோகம்!எனக்குப் புரிகிறது!

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்