Thursday, July 5, 2012

பார்த்த பார்க்க

பாலில் மீன்கள் வாழும்
என்று தெரிந்து கொண்டது
உன் முகம் பார்த்த பிறகுதான்...

இவ்வளவு மின்சாரம் தயரிக்கவல்ல
குட்டியூண்டு மின் ஆலை
இரண்டு  உன் முகத்தில் 

கோபம், ஆசை, நாணம்
கெஞ்சுதல்; கொஞ்சுதல்; காதல்
என்று  அவள் அதிகம் பேசுவது 
இதழ்களால் இல்லை இமைகளால் தான் 
நான் தட்டாமல் கேட்டுவிடும் கட்டளைகள் அது

குறிப்பு  - நான் தினம் பார்க்கும் அந்த பெயர் தெரியாத அழகிக்காய் இந்த கவி...

#O#O#O#O#O#O#O#O#O#O#O#

பலர் சூடியும் வாடாமல் 
அடுத்தவர் சூடக் கொடுக்க  
முடிந்தது விழி மலர் மட்டும் தான்...

இந்த இரண்டு காசுகள்
என்றும் செல்லாமல் போகாது...
அது ஏன் வீணாய் செல்லரித்துப் 
போக வேண்டும்?

கடவுள் செய்த பிழையை 
திருத்தும் ஒரு வாய்ப்பு 
கண்தானம் செய்கையில் 

குறிப்பு - கண்தானம் பற்றி சங்கர நேத்ராலயா சொல்வது.


2 comments:

  1. ம்.. பாலில் மீன்கள் அவள் கண்களா..
    கலக்கரிங்க-ணா.
    அருமை!

    ReplyDelete
  2. https://sankaraeye.com/social-impact/pledge-your-eyes/

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்