Monday, August 27, 2012

கவிஞனின் கொசுக்கடி

முத்த முள்ளாலே
நித்தம்  கொன்றாளே
மொத்த தூக்கத்தை
கடத்தி சென்றாளே...

இரவு  மட்டும் வந்து
இதயம் மட்டுமல்ல
உடல்கள் முழுதும் குடிபுகுந்தாலே
இமை மூடாத
வசியம் செய்தாலே

good night குறுஞ்செய்தியை
புகையாக  அனுப்பியும்
அவள் உறங்கவே இல்லை
எப்படி நுழைந்தாள்
என் வீட்டினுள் விளங்கவே இல்லை

சொல்லாத  இடமெல்லாம்
கைவரிசை காண்பித்தாள்
முத்தத்தின் தலும்பாலே
முத்திரைதான் பதித்தாள்

அவள் காதலை
என் ரத்தத்தில் கலந்தாள்
பெயரறியா நோயிலே
நானும் தான் விழுந்தேன்...

...

ஆவலுடன் களவி முடித்த நான்
சலித்துப் போகையில்

அவள் ரத்தத்தால்
அவள்  கல்லறையில் எழுதுகிறேன்...
என்னை  உறங்கவிடாத காதல்
இங்கே உறங்கி கொண்டிருகிறதென

காதலி வதைத்தால் மட்டுமல்ல
ஒரு கவிஞனை கொசுக்கடித்தாலும்
கவிதையாகும்







1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்