Monday, April 9, 2012

துளிகள் - 8

துளிகள் - 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7

வெறும் ஆறடி தெரு நீயடி...
உனக்குள் என் முகவரியைத் 
தொலைத்துவிட்டு  திரிகிறேன் ஏனடி?
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

தனியாய் சிரிப்பதுதானே
பைத்தியம் என்றாய்...

நான் ஏன் காதலில்
தனிமையில் அழுகிறேன்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

என் வாழ்வில் நீ இருந்த
அந்த ஒன்றிரண்டு ஆண்டுகளைத் தான்
திரும்ப திரும்ப
வாழ்ந்து பார்க்கிறேன் என் தனிமையில்

அதனால் தான்
உனைத் தொலைத்ததை
என் இருதயம் நம்ப மறுக்குது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உனக்கே தெரியும்
இருதய நோயை paracetamol ஆல்
குணப்படுத்த முடியாதென்று...

அப்படித் தான்
நீ உருவாக்கிய வெறுமையை
வேறு எதாலும் நிறைக்க முடியாது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உன்னை மறக்க
என் இருதயத்துக்குள்
நொடிக்கு நொடி
ஒரு பட்டிமன்றம் நிகழ்ந்தேருது...

ஏனோ இறுதியில்
உன்னை நான் காதலிக்கிறேன்
என்பதையே தீர்ப்பாக்கி முடிக்கிறேன்...

1 comment:

  1. கவியின் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும், மற்றொரு கவியை ஊற்றி நிறைத்திருப்பதை காணமுடிகிறது!

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்