Wednesday, March 28, 2012

தினம் தினம்

எதோ ஒரு தோழி அனுப்பி வைத்த
மின்னஞ்சல் கணபதியை
ஐந்து பேருக்கு அனுப்பினால்
நினைத்தது நொடியில் நிறைவேறுமாம்...
இதோ அனுப்பி விட்டு
உன் காதலுக்காய் காத்துக்கிடக்கிறேன்

முகப்புத்தகம் முதல்
linkedIN வரை நீ இல்லை
என்று தெரிந்த இடமெல்லாம்
என் கண் பார்வையை
காவலுக்கு வைத்து
உன்னைத் தான் தேடி திரிகிறேன்

உன் எண் இல்லை
ஏனோ தெரிந்தும்
60 லட்சம் முடித்து
60 லட்சத்து 1வது முறையாய்
என் கைப்பேசி மெமரிக்குள் சுற்றி வருகிறேன்

முன்னே செல்லும் பெண்
நீ இல்லைத் தெரிந்தும்
ஏனோ ஒரு முறை பார்க்கத் தவிக்கிறேன்...

பின்னால் அழைக்கும் ஓசை
கேட்கும் போதெல்லாம்
நீயாக இருக்க வேண்டிக்கொண்டே
திரும்பிப் பார்க்கிறேன்...

உன்னை ஒருமுறை
பார்த்திடும் ஆசையில்
உன் ஊரின் மொத்த பயணத்தையும்
நானே பதிவு செய்து irctc - யையே குழம்பவைக்கிறேன்.

நீ மடலனுப்பாத போதும்...
உன் மடல்தேடிதானே
என் மினஞ்சல் பெட்டியை
தினம் அலசினேன்

உன்னைத் தரமுடியாது என்று
உன் பெற்றோர் தானே முடிவெடுத்தனர்...
இன்னும் கடவுளின் முடிவு வெளியாகவில்லை
என்ற நம்பிக்கையூட்டிய உயிரில் நான்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்