Monday, June 4, 2012

நீர்த்து போன கவிதை


என் காதலை கவிதையாய் படித்தவர்கள்
மீண்டும் மீண்டும்
படிக்கத்தூண்டியதாய் சொல்லும்போது
எனக்கு மட்டும் ஒரு முறைக்கு மேல்
படிக்கமுடியா வலியேனென்று
உன்னிடம் கேட்க ஆசைப்பட்டேன்
.
என் காதலின் ஆசையை படித்தவர்கள்
உன் காதலி அதிர்ஷ்டசாலி என்றபோது
அதை உதறிப் போகும்
துரதிர்ஷ்டசாலியாய் நீ ஆவது என்?
என்று உன்னிடம் கேட்க ஆசைப்பட்டேன்
.
நான் அழுகிறேன்
என் கண்ணீர் எங்கே?
நான் மரிக்கிறேன் 
உயிர் மட்டும் போகாதது ஏனோ?
என் இரவுகள் இனி 
கருத்துப் போன பகல்தானோ?
 .
இன்னும் எவ்வளவோ 
எழுதி வைத்தேன் கேட்பதற்கு 
என் வரிகள் எல்லாம்
வழிந்த என் கண்ணீரில்
நீர்த்து போனது ஏனோ?
 .
தமிழகத்தின் இந்த எல்லையிலிருந்து
அந்த எல்லையிலிருக்கும் உன்னிடம்
கத்தி கேட்கிறேன்...
உன் இருதயம் செவிடல்ல
என் இருதயத்தின் முனங்களும்
உனக்கு கேட்கும் நானறிவேன்...

4 comments:

  1. காதலித்துப் பிரிந்த வேதனை சொல்லும் கவிதை அருமை

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்