Saturday, June 23, 2012

"பேய்"வீகக் காதல்

பேய் தான் என் காதலி
அவளுக்காய்
பொய் கலவா கவி வரி...

மரணத் தாயின் கல்லறைக் கருவறையில்
அதிக நாள் உறங்கினாயோ?
உந்தன் அழகு கூந்தலை
ஒட்டடை பூக்கள் மேலும்மெருகேற்றுது...

மரணம் என்ற எதிர்காலம்
காதலின் சாயலில்
உன் கண்களில் தெரியுது...

மரணத்தால் ஊமையான
இரு துளை புல்லாங்குழல் உன் நாசி...
வராத இசையும் எனை வசிகரிக்குது...

குருதி  ருசிபார்த்த கறைகளின்

சுவடுகள் உதடுகளில் இருக்குது
இருந்தும் உந்தன் முத்தம் தென் சுவைதான்...
இது உண்மையிலே அசைவ முத்தம் தானே

ஆயுள்  முடிந்த பிறகு கடந்த ஆண்டுகளால்
உன் அழகை ஒன்றும் செய்ய முடியவில்லை...
உன்னை சித்தன்ன வாசலோவியம்
என்று வடித்த கவிதையை திருத்திக்கொண்டேன்...


நீ  எந்தன் சாதி தான்
இருந்தும் நாம் செய்யப் போவது
கலப்புத் திருமணம் தானே?

மரணங்களில் சேரப் போகும்
ஒரேக்  காதல் நமதாகும்...

இருவேறு உடல்களில்
ஒற்றை உயிர்களாய் வாழ்கையில்
பொய்த்துப் போகும் காதல்களுக்கு மத்தியில்
இருவேறு சவப்பேழைக்குள்
உயிர்  வாழும் நம் காதல்
ஆண்டுகள் தாண்டி...

1 comment:

  1. புதுமையா இருக்கு
    இந்த காதல்

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்