Sunday, July 29, 2012

திரை இசை

இவர்கள்
நாதஸ்வரத்தால் நலம் விசாரித்தார்கள்
கிடாரால் காதல் சொன்னார்கள்
மௌத்  ஆர்கனால் முத்தமிட்டார்கள்

குழலால்  காதலை அழைத்தார்கள்
வயலினால்  அழுதார்கள்
வீணையால் திருமண சந்தையில் விலை போனார்கள்
ஹார்மோனியத்தால் பிச்சை எடுத்தார்கள்

உருமியால் தெய்வத்தை அழைத்தார்கள்
பியானோவால் முன்னால் காதலை பாடினார்கள்
மகுடியால் பாம்பு பிடித்தார்கள்


இப்படி இசையை மேடையேற்றிய
திரையுலகில் இன்று  எல்லாம் தூசியேரி
மூலையில் விட்டு கணினி வாசிக்க
கண்டதெல்லாம் இசையென்கிறான்

புரட்சி  என்று சொல்லிவிட்டு
பார்த்து செய்த வீணையை
புழுதியில் எறிகிறார்கள்

இசை இன்னும் அநாதை ஆகவில்லை
எங்கள் நம்பிக்கைக்கும் உயிர் போகவில்லை ...

1 comment:

  1. புரட்சி என்று சொல்லிவிட்டு
    பார்த்து செய்த வீணையை
    புழுதியில் எறிகிறார்கள்

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்