Tuesday, September 11, 2012

அணு அணுவாய்... கூடங்குள சித்திரவதை

இரும்பு கோட்டைக்குள்ளே
இத்துனுண்டு அணுவத்தான பிளக்கான் ...
உனக்கும் சேத்துதான மின்சாரம் கொடுக்கான் ...
அறிவியல் புரட்சி செய்து
உன் இந்தியாவ தான வளக்கான்...
அப்புறம் எதுக்குளே இத்தனை எதிர்ப்பு
... இது ஐந்தை புறந்தள்ளிவிட்டு
பகுத்தறிவதாய் அறிந்தாய் சொல்பவர்.

லட்சம் பேரு எங்கள
பிறந்த மண்ண விட்டு போக சொல்வ
குளிர்வித்த நீர் கழிவோ
அணு  பிளந்த ஆபத்து கழிவோ
கொண்டுவந்து கொட்டி
எங்களுக்கு உணவிட்ட கடல கொல்வ
... இது ஆறறிவு  எதுவுமின்றி
அழிவை  உணர்ந்தவர் சொல்வது...

அலட்சியம் ஆபத்து அரசியல்
அழுகை பயம் கோபம் என்ற
புகைக்குள் முச்சு தினறிகிடக்கிறது கூடங்குளம்
நீ நான் நாம் இங்கே வாழும் 
உல்லாச வாழ்விற்காய்...

கால் பைசா பெறாத கண்டவளு(னு)டன்
கடலை என்று கணநேரமும் தொலைபேசி
கரண்டை கரியாக்கியதுண்டா?

யூனிட்டு வெறும் அஞ்சுதானென்னும்
மீட்டர்  தான் பழுதாச்சேன்னும்
அலட்சியத்தில்  அணைக்காமல்
விளக்கோ விசிறியோ விட்டதுண்டா?

மார்கழி குளிரோ பங்குனி வெயிலோ
வெப்ப  மரக் காத்திருக்கு
வாங்கி வர தேக்கு மாற சன்னலிருந்தும்
ஏசி போட்டு போர்வைக்குள் உறங்கியதுண்டா?

ஐஞ்சு தட்டு தின்னு நல்ல கொழுத்திருந்தும்
ரெண்டு மாடி ஏற இயலாத உன்னால்
மின்தூக்கி  தூக்கிவிட்டு தான் தினம் ஏறுவதுண்டோ?

மண்பான நீரிருக்க புதுசாக காய் இருக்க
குளிரில் கிடந்த பழசு தான்
வேண்டுமென்று உண்டதுண்டா?

அடுத்த தெருமுதல் ஆளுடன் பயணமுன்னு
பெட்ரோலா விரையாமாக்கியதுண்டா?
குனிந்திடசோம்பலாகி நல்லியைஅடைக்காமல்
நீரையும் சீரழித்ததுண்டா?
அவள் எவனுடன் ஓடிப்போகிறாள்
என்ற நெடுந்தொடரின் ஆர்வத்தில்
அடுப்பு எரிவாயுவை வீனாகியதுண்டா?

மின்தட்டுபாடிடம் இடிபடுவதுமட்டுமல்ல
அங்கே அவர்கள் அடிபடுவதற்கும்
அவர்கள்  ஊர் அழிவதற்கும்
காரணமும் நாம் தான் ...
உன்னால் உண்டான இந்த அவலத்தை
இத்தனை லட்ச நிவாரணம் துடைக்க போவதில்லை...


பின்குறிப்பு - என் அணு உலை வேண்டமேன்கிறோம் என்கிற கூடங்குளத்தாரின்  இந்த 13 காரணங்கள் என் நெஞ்சில் முள்ளா குத்துச்சு... அதில் வடிந்த வரிகள் .

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்