Wednesday, September 26, 2012

செத்தவன் பேசுகிறேன்

அழுதால்  கண்ணீர் வருமென்பது
காயங்கள் வலிக்குமென்பது
உயிர்இன்றி மரணமென்பது

இப்படி உயிர் வாழ்ப்பவரின்
எல்லா விதியும்
கடந்து(மரணித்து)விட்டேன்...

=O=O=

மறுத்த பிறகும் நம்பிக்கையில்
வலிக்கும் என் காதலை
டிராப்ட்டில் வைத்திருக்கிறேன்.
மீண்டும் அனுப்பும் வரை மரணம்...
இல்லை என்று தெரிந்த பின்பும்
எனதே என்ற நம்பிக்கையில்
உன்னை வைத்திருக்கிறேன்
கிழிந்த காகிதத்தில் கிழிக்கப்பட்ட இருதயத்தில்.
தூர எரியும் வரை மரணம்...

=O=O=

இன்று தான் அவளை
முதலில் பார்த்தேன்
இன்று தான் நானும் அவளும்
ஒரே வண்ண உடையில் வந்தோம்
இன்று  தான் என் காதல் சொன்னேன்
இன்று  தான் என் காதல் கொன்றாய்

365 நாளும் என் நாட்காட்டியில்
கிழிக்கப்படுவது தேதியாக இருந்தாலும்
கிழிபட்டு சாவது நானாகவே இருந்தேன்...

=O=O=

"எப்படி இருக்க" என்ற
தோழனின் கேள்விக்கு
உயிரப்பேதும் இல்லாமல்
சிரித்து வைக்கும் உதடு...

ஒ(வ்வொரு)ரு முறையும்
என்னோடு சேர்த்து கண்ணீரையும் 
கொலை செய்தேன்...

=O=O=

கையளவு இருதயத்துள்
கையடங்கா கண்ணாடி துண்டு போல்
உன் நினைவு.. என்னுள்ளே
சுவாசிக்கும்  நொடியெல்லாம் மரணமடி

என் தலையணை குடித்த
கண்ணீரை அலசிப் பார்
என் இரவுகளின் நீளத்தில்
என்னோடு கிடந்து பார்
நான் எழுதும் காதலை
கொஞ்சம் மொழி பெயர்த்துபார்

என் கடவுச்சொல் திருடி
என் மின்னஞ்சல் ஒருமுறை திறந்து பார்
எங்காவது நான் செத்து கிடப்பேன்...

"நான் உன்னை காதலிக்கவில்லை "என்றது 
அவள் எனக்கு கொடுத்த ஆயுள் தண்டனை
நான் இன்னும் அவளை காதலிப்பது
நானே எனக்கு கொடுத்துகொள்ளு[ல்லு]ம்
மரண  தண்டனை

பின்குறிப்பு - குண்டூசிகள் மீது படுத்துறங்கும் காதலுக்கு சமர்ப்பணம்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்