Monday, September 10, 2012

இனி சல்வார்தான் அணிய போகிறேன்

இனி சல்வாரோ சேலையோ தான்
அணிந்து கொள்ள போகிறேன்...
பாதம் தொடும் சடையிட்டு
சரம் சரமாய் மல்லிக்கப்பூ
வைத்துக்கொள்ள போகிறேன்

புடவை சுற்றிய கல் போதும்
முடியாது என்றிருந்ததெல்லாம் முடிந்திருக்கும்

அவர்கள் மத்தியில்
இனி சல்வாரோ சேலையோ தான்
அணிந்து கொள்ளப் போகிறேன்.

நான் கேட்கவேண்டிய அவசியமில்லை
இனி எல்லாருக்கும் நிச்சயமாய்
நான் தேடும் கேள்வியின் பதில் தெரியும்
ஒரு நாள் கூட சிரிக்காதவனுக்கெல்லாம்
முப்பத்திரண்டு பல் தாண்டி எகிறு கிழிந்து
முப்பத்திமூன்றாவதும் வெளி தெரியும்
இனி நான் அழைத்தால்
காப்பி சாப்பிட நேரம் இருக்கும்
எனக்கும் சேர்த்து பிரியாணிக்கும் காசிருக்கும்
இனி  நான் எது செய்தாலும் சரியாக இருக்கும்

எவன் எதை பார்க்கிறான் என்றறியாமல்
பகுத்தறிவு இழக்கும் அவள்களின் தேசத்தில்
அவர்களை அதை மட்டுமே பொருட்படுத்தி
மற்றவரை உதாசீனப்படுத்தும் அவன்களின்
மத்தியில் பிறந்து தொலைத்து விட்டேன்


எனவே!
இனி  சல்வாரோ சேலையோ தான்
அணிந்துகொள்ள போகிறேன்
பசிக்காக தின்னலாம்
ருசிக்காக தின்னலாம்
பார்ப்பதை  எல்லாம் தின்றால்?
அப்படி தின்பவர் மத்தியில் பிறந்துவிட்டேன்
எனவே!
இனி  சல்வாரோ சேலையோ தான்
அணிந்துகொள்ள போகிறேன்




No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்