Wednesday, September 12, 2012

காதல் எனக்கு வேண்டாம்

அது என்ன கண்ணா
இல்ல  அம்மிக் கல்லா?
வச்சு நெஞ்ச அரச்சுபுட்டா

அவ பொண்ணா
இல்ல கண்ணி வெடியா
இருதயம் பூர பதுங்கி கிடந்து
அப்ப  அப்ப வெடிக்க வச்சா

அவள், என் நரம்பெல்லாம்
ஓடும் கண்ணாடி கரைசல்
விதையின்றி அவள் விளையும் 
நான்  காதலின் கரிசல்

அவள் புகைப்படம் என்
இமையுள் முளைத்த முள்
என் இரவிடம்
இனி உறக்கங்கள் இல்

பூவுக்குள்ள தேனா
காதல் நெஞ்சுக்குள்ள
வ(ம)ண்டு அவளாய் குடிக்காமல்
நானாய் எங்க சொல்ல

சொல்லாத காதல்
அது தாளாத பாரம்
சொல்லி  அவளிடம்
செல்லாமல் போனால்
இங்கு ஆறது காயம்


அதிகம் ஆசை படுபவனல்ல


ஜோடியாய் நிலவொளி  குளியல்
உறங்காமல் பேச்சு
கெஞ்சி கொஞ்சி முத்தம்
அப்ப அப்ப ஊடல்
அவளாய்  குளிரும் கூடல்
எதுவும் வேண்டாம்...

என் இருதயத்துள் இல்லனாலும்
நான் பார்க்கும் தூரத்தில் அவள்
அதிகம் அவள் பேசலன்னாலும்
எதோ ஒன்றிரண்டு குறுஞ்செய்தி
அவளை காதலிக்க முடியாவிட்டாலும்
அவள் புகைப்படத்தையாவது காதலித்துவிட்டு  போகிறேன்

சொல்லி இருதலையும்
செத்து போவதற்கு
சொல்லாமல் ஒருதலையாய்
என் காதல் வாழ்ந்த்து விட்டு போகட்டும் 

பின்குறிப்பு - சொல்லாமல் காதலிப்பவர்களின் கோழைத்தனத்திற்கு சமர்ப்பணம்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்