Sunday, September 30, 2012

சேவல்கள் நல சங்கம் - 1

முன்குறிப்பு- தலைப்பிலிருந்து தரை வரை இது படிக்கும் பெண்களுக்கு கருத்து வேறுபாடாய் தெரியலாம் (தெரியும்)... வேறுபாட்டை கருத்தில் சொல்லுங்கள் விவாதிப்போம்.
மாதர்  குலமே!
இன்னுமொருமுறை இன்னுமொரு ஆணை 
வரதட்சணை குற்றவாளியாக்கும் முன்பு 

நகைக் கடைகளில் வீசிதீரும் 
பெருமூச்சின் காரணம் சொல்லிவிடுங்கள் 
அடுக்கி கிடந்து தூசி படியும் 
பட்டு புடவையின் தேவை சொல்லிவிடுங்கள்

ஆண்கள் நாங்களும்  எங்கள்
குற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம்

ஏழு இலக்க பேங்கு பேலன்சு
எடுப்பு  வேலைக்கு ஆளு
ஏக்கர் கணக்கில் சொத்து
எளிமையா ஒரு வீடு
என்று எதுவுமே பெண் வீட்டார்
மாப்பிள்ளையிடம் எதிர்பார்ப்பதில்லை
என்றொரு வாக்குமூலம் எழுதி தாருங்கள்

நானே பெண்வீட்டில் வாங்குபவனை
செருப்பால் அடிக்கிறேன்...

உன்(ங்கள்) மாமியார் வாங்குகையில்
தவறென்று பேசிய நியாயம்
உன் அண்ணனின் திருமணத்தில்
உன்னை பெற்றவள் பட்டியளிட்டு
எங்கே போயிற்று
உன் தம்பிக்கு பெண் பேசுகையில்
"எனக்கெல்லாம்  எவ்வளவு செஞ்சா எங்க ஆத்தா"
என்று பீற்றுகையில் எங்கே போயிற்று
என்பதற்கு மட்டும் விளக்கம் தாருங்கள்

ஆண்கள் நாங்களும் எங்கள்
குற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம்

வராத வரதட்சணைக்காய்
வெடிக்கப்பட்ட காஸ் சிலிண்டர்பற்றி
கவலை படும் உலகமே
வாங்க முடியாத வைர  நெக்லசுக்காய்
விவாகரத்து வழக்கு பார்த்த மனுக்கள்,
ஆண் முகம் பேத்தெடுத்த
பூரிகட்டைகள் பற்றி யாருக்கு அக்கறை

 பின்குறிப்பு:
1) இதை யாரையும் காயபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல
2) ஒரு மாணவனின் பார்வை. விமர்சாக ஆசிரியர்கள் என் கருத்தில் தவறு கண்டால் போருத்தருளூமாறு கேட்டு கொள்கிறேன்.
3) இனி இந்த சேவல் நல சங்கம் ஆண்களுக்காய் குரல் கொடுக்கும்.

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்