Thursday, December 29, 2011

சென்னையில் தானே



தொலைப்பேசி ரசிதுகளை 
நாள் தவறாமல்
செலுத்தும் அன்பு மகன்
முதியோர் இல்லத்தில் இருக்கும்
அன்னையை பார்க்கும் நாள்
மறந்து, கடந்து போவது போல்

நாள்  கடந்து
ஆடி மாத காற்றையும்
ஐப்பசி மாத மாரியையும்
மார்கழி மத்தியில் 
தமிழகம் அழைத்து வருது
தானே புயல்

பாசத்தை  விற்றுவிட்டு
கண்துடைப்புக்காய்
10 நூறு ரூபாய் தாள்களை
அன்னை கரங்களில்
திணித்துப் போகும்
பெற்ற பாசம் போல்

விருந்தாடி வந்து
வீட்டு குழந்தைக்கு
வாங்கி வரும் பலகார 
பொட்டலங்கள் போல்

தமிழகத்தை
நனைக்க போராடுறது
புதுவை புறம்
"தானே!" தானாய்


1 comment:

  1. உன் உவமையில் உள்ளம் மகிழ்ந்தது தோழா

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்