Tuesday, December 27, 2011

இவ்வளவுதான்



எப்பேர்பட்ட  வீட்டுக்கு
ஆண் வாரிசே ஆகினும்
பிறப்பது என்னவோ
மருத்துவமனைத் தொட்டிலில் தான்

கோடி ரூபாய்
கடிகாரமாகினும்
பாட்டரி  சாகையிலோ
சாவி கொடுக்க மறவையிலோ
நின்றுதானே போகிறது

வங்கிக் கணக்குகளை
எண்ணிக் கொண்டிருப்பவனுக்கும்
வாங்கியக் கடன்களை
எண்ணிக் கொண்டிருப்பவனுக்கும்
மாதத்தின் முப்பதாம் நாள்
நெருக்கடியாகவே நகர்கிறது

விலைநிலத்தை
வீடுமனை ஆக்கி
தங்கத்தில் தட்டு
வாங்கியவனும்
பசிக்கையில் அரிசிச்
சோறு தான் சாப்பிடனும்

எந்த மதமானாலும்
ஏதேதோ சாதி ஆனாலும்
கல்யாணம் என்னவோ
ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே?

தங்கக் காரு
வீட்டில் எட்டுக் 
கொண்டவனாகினும்
இறுதி  ஊர்வலம்
அமரர் ஊர்த்தியில் தான்
சந்தனக்  கட்டிலிலேயே
உறங்கியவன் ஆகினும்
இறுதி உறக்கம் என்னவோ
நெருப்புக் கட்டிலில் தான்
தங்கத்தட்டு அறுசுவை 
விருந்தோ
ஈயத்தட்டு  ஆறுவீட்டு
மிச்சமா
சாப்பிட்டு வளர்ந்த உடம்பு
முடிவது என்னமோ
ஒரு பிடி சாம்பலாய் தான்

 இதற்கு  நடுவே
எதோ வாழும்
பொருள்ளில்லா வாழ்க்கைப்
போராட்டம் எல்லாம்
ஒரு சான் வயிற்றுக்குத்தானே

1 comment:

  1. Valkaiyai vilaki vittaye thozha, unn vaira varigalil:)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்