Friday, December 23, 2011

மதம் கடந்த மனமார்ந்த வாழ்த்து


ஊருக்காய் உலகுக்காய்
முள்ளை ஏந்திக்கொள்ள
பூ பிறந்த தினம்

தெய்வம் மனிதனாய்
பிறந்த தினம்

அன்பு  ஒன்றே அழியாதது
என்று புறியாத
மனிதனுக்கு  சொல்ல
கடவுளுக்கே ஆயிரம்
பிறப்பு தேவைப்பட்டது
அதில் ஒரு பிறப்பு
எழுதப்பட்ட நாள்

மண்ணுக்கு சூரியன் வந்தான்
அவன் இருப்பிடத்திருக்கு
விண்மீன் வழி சொன்னான்

கிறிஸ்துமஸ் தாத்தாவின்
பரிசுக்காகவே 
நல்லெண்ணம் பூத்தது
பூக்களின் நெஞ்சினில்

அவர்  வெண் தாடி போல்
பொழிந்திடும் மார்கழிப் பனிபோல்
உள்ளம் வெளுத்தது
மகிழ்ச்சி செழித்தது


நான் வாழ்த்தையிலே
கிறிஸ்தவன் இதழ்கள்
சிரிக்கத்தான் செய்தது

கிறிஸ்த்தவன் கொடுத்த
கேக்கும் எங்கள்
தொண்டைக் குழிக்குள்
இனிக்கத்தான் செய்தது

மதங்கள்  பல
மனங்கள் பல
அனால் உள் 
எழுத முற்படுவது 
அன்பு ஒன்றுதான்
எங்கும் விழைவது
மகிழ்வு ஒன்றுதான்

உடலால் பிரிந்துக்
கிடக்கும் ஓர் உயிர்களே
இங்கு சந்தோசக் கூத்தாடுங்கள்

எல்லோருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


1 comment:

  1. தலைப்பிலேயே மனம் குளிர்கிறது

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்