Wednesday, April 13, 2011

தேர்தல் சிறப்புப் பரிசு



நேற்று...

சிந்தபோகும்
ஈழ ரத்தத்தின்
ஒத்திகை...
அதற்க்கு அரசியல் தலைகள்
சிந்தும் முதலை கண்ணீரின்
நகலிது...



இன்று...

நம் மக்களாட்சி
உரிமையை 200 ரூபாய்க்கு
விற்று விட்டு
அத்தியாவசியங்களை அதிக விலைக்கு வாங்கும்
அவலத்தின் ரசிது...

நாளை...

நாங்கள் பிறந்தப்
பிறகு எங்களுக்கு எழுதப்படும்
தலையெழுத்து
(எத்தனாவது முறை என்று EC ல கேட்டுக்கோங்க)

இதன் பிழைகள் அடுத்த
ஐந்தாண்டில் திருந்தும்
என்ற கனவோடு
(நம்பிக்கை இல்லை கனவு)



No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்