Sunday, August 28, 2011

சந்தேகிக்கிறேன்

கட்டி இருக்கிய
காதலர்கள் நடுவே
இலேசாய் கசிந்து வரும்
காற்று போல

அவள் ஓர விழி
நிரம்பி வலிந்து
என்னை நனைக்கும்
பார்வை வெள்ளத்தை
அவள் உணராமல்
நான் என் விழியாலே
மெல்ல பருகையிலே

அமுதும் இவ்வளவு
சுவைக்குமா என
சந்தேகிக்கிறேன்


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்