Tuesday, September 4, 2012

இவர்கள் பிச்சை எடுப்பதில்லை


நல்லாதன உடம்பிருக்கு
உழைத்தால் என்ன?
படிக்கும் வயதில் 
பிச்சை எடுக்கிறாயா?
.
உனக்கு அமைந்தது போல் தான் 
எல்லோர் வாழ்க்கையும் என்ற நினைப்பில் 
முனங்கி போனயாமே? அன்று பிச்சை 
எடுத்திருந்தவர்களை பார்த்து...
.
இன்றெல்லாம் அவர்கள்
பிச்சை எடுப்பதே இல்லை...
.
அழகாய் அடுக்கி வைத்து
வரியோடு கொடுத்தால் உடசல்களையும்
அடுக்குமாடி கட்டிடமாய் இருந்தால்  
ஆண்ணாச்சி சொல்லும் பொய்யை
ஏசி அறையில் கண்ணாடி குடுவையுள்ளே
முந்தா நாள் பழசையும் 
வாங்கும் நாம் இருக்கும் ஊரில் 
.
இவர்களை நம்பி முதலீடு
செய்யப்படுவதோ...
.
ரீமொட் கவரும் ஐம்பது ரூபாய் பர்சும்
ருசியே இல்லாவிடினும் நம்பிக்கை தரும்
ஐம்பது ரூபாய்க்கு பத்து ஆப்பிளும்
பத்து ரூபாய்க்கு மூன்று பேனாவும்
வலி தீர்க்கும் என வலிக்க பேசும் தைலமும் ... மட்டுமே தான்
.
இருந்தும்
இன்றெல்லாம் அவர்கள்
பிச்சை எடுப்பதே இல்லை...
.
ஓடிப்போன அப்பா
நோயால் ஓய்ந்துபோன அம்மா
வரதட்சனையால் மணமாகாத அக்கா
தப்பி தவறி திருமணமானால்
பணமென்று பிச்செடுக்கும் அத்தான்
தான் தொலைத்த படிப்பை
தன் தம்பி தேடி ஓடும் செலவு
என்ஜினியர் படித்தும்
வேலை இல்லாமல் நடுவுள்ளவன்
ஆப்பரேசன் செய்தால் நேராகும்
போலியோவால் வளைந்த கால்
இத்தனைக்கும் நடுவில் அவள் காதல்
.
இப்படி இவர்கள் முதுகிலும்
நெஞ்சிலும் நம் கண் தெரியா பாரம்
இருந்தும்
இன்றெல்லாம் அவர்கள்
பிச்சை எடுப்பதே இல்லை...
.
யாரவது ரெண்டு பேர்
வாங்கினால் போதும்
இன்று உலை வைத்து விடலாம்
அம்மாவுக்கு மாத்திரை
தம்பிக்கு இன்டெர்வியு பாரம்
வாரக்கடனுக்கு வட்டி
தங்கச்சிக்கு குண்டுமணி தங்கம்
குடிகார அப்பனுக்கு குவார்ட்டர்
இதை எல்லாம் மறந்து போகிறான்
அந்த கூடை காலியானால்... காலியானால்??

1 comment:

  1. அந்த கூடை காலியாவதற்கு
    முன்னால் கடைசியாக உள்ள
    பொருளுக்கும் விலை குறைத்து விற்று
    சிரித்த முகமாக தங்கள் ஒரு நாள்
    சம்பாதியத்தை எண்ணி எண்ணி பார்க்கும் அவர்களை
    பார்க்கும் பொது நம்மையும் ஒட்டி கொள்ளும் அவர்கள்
    சந்தோஷம்

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்