Sunday, August 7, 2011

வாழ வைத்தவனுக்கு வாழ்த்து


ஜீன்ஸ் துணி
நூல் இலை கொண்ட 
தூரம் கூட அதிகம் 
தோழா என் உன் சிந்தை 
 ஒப்பிடையில் 

விரலும் நகமும் 
உடலும் உயிரும் 
மலரும் தேனும் 
உடுக்கை இழந்தக் கை 
இப்படி வற்றிப் போன 
கவிஞர்களின் உவமைப் பட்டியலை 
புதுப்பித்தோம் நம் நட்பால் 

என்னையும் அழகாக்கிய 
உன் அழுக்குச் சட்டை 
உன் தட்டில் பிடுங்கித் தின்றதால் என் நாவில் 
மெதுவாய் மாறிய கல் இட்லி
உடலுக்குள் அடை பட்ட உயிரைத் தவிர 
கண்டது கொண்டது எல்லாம் பகிரப் பட்டது இங்கே 

உலகில் சுமையானது கண்ணீர்
அதை நான் அறியாமலே போனேன் 22 ஆண்டுகாளாய் 

22 ஆம் ஆண்டு மிக சிறப்பு 
என் நட்பின் தேசத்தில்
மக்கள் தொகை பெருக்கம் அதிகம் 

என் வாழ்வின் வானத்தில் பவுர்ணமி கொணர்ந்தத் தோழமையே 
நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் 

2 comments:

  1. நண்பரே வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. dei nee thatta pidungi saptiya... poi sollatha...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்