Friday, January 6, 2012

இசைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


1966 தமிழக கரை வந்த
ஒருப் புயல் இன்றும்
லட்சோபக் கோடி
இதயங்களை நனைக்கிறது
இசை மழையால்

 தமிழ் மறந்த
நவீன மங்கைகளின்
வாரிசுகளைத் தாலாட்டும் 
இவன்  இசை

காதலியின் 
சுடு வார்த்தைபட்ட
இதய  காயங்களை
இறகுகளால் வருடும்
இவன் இசை
 
காதலைப்  பெற்ற
இதயத்தை
இமய உச்சம் ஏற்றும்
இவன் இசை
 
வாழ்வை  வெறுத்தவனை
வாழத் தூண்டும்
இவன் இசை
வாழ்வை வென்றவனை
மேலும் மெருகேற்றும்
இவன் இசை
 
உலகம் மெய்மறக்கும்
கண்ணனின் குழலிசையில்
அவனும் மெய்மறப்பான்
இவன் இசையில்
 
இவன் இசை கலையில்
கலியுக ராவணன்
ராவணனுக்கும் இவனுக்கும்
இரு வித்தியாசம்
ராவணன் அகந்தைக்காரன்
இவன் இல்லை
ராவணன் இசையால்
இமயத்தைதான் அசைத்தான்
இவன் உலகையே அசைத்தான்

இவனுக்கு விருதாகி
ஆஸ்கார் தன்னை 
கவுரவப் படுத்திக்கொண்டது

தாயின் பாசம் கசியும்
தாலாட்டை இருவரால் தான்
98 விழுக்காடு நிகர் செய்யமுடிந்தது
ஒன்று  இசைஞானி
மற்றொன்று இசைப்புயல்

இவன் இசைக்கு
மொழி மத தேச
எல்லை இல்லை
என்று உலகில்
அழுத்தி எல்லோர் 
இதயத்திலும் எழுதியவன்
 
இசையே
உனக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள்
[06 Jan 2012]


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்