Wednesday, January 4, 2012

முள்ளாகும் முல்லை


பாரதி முதல் புதுமைபித்தன் வரை
நதிநீர் இணைப்பை பாட
மடையன் நான் எழுதுகிறேன்
நதி நீருக்கு அடித்துக் கொள்ளும்
அண்ணன் தம்பி பற்றி

அன்னைமடிக்கு
அந்நியன் அணை கட்டிபோட
பாலுக்கு சண்டை போடும்
இரு பிள்ளைகள்
சேரமும் பாண்டியமும்

ஆழ்துளை  கான்கீரிட்
என்று பல நவீனமுறை 
கொண்டு கீறாத அணையை
பலபடுத்த போராடும் தேசமே!
இனி எந்தக் கான்கீரிட் போட்டு
ஒட்டப் போகிறீர்கள்
கீறிப்போன இரு சகோதர
மாநிலத்து நட்பை

அடக்க வந்தவனுக்கு
அகிம்சை சொன்ன நாடே!
சகோதரனுக்கு
ஏன் இந்த இம்சை செய்கிறாய்
தான் செஞ்சு
"இடுக்கி" போட்டு 
கழுத்தைநெரிக்கும் தப்புக்காக
அரசியல் சதுரங்கத்தில்
எதிராளியை மட்டுமல்ல
தன்  பக்கத்தையும்
முட்டாளக்குது ஒரு கூட்டம்

தம்பி தெரியாமல் தப்பு செஞ்சா
அண்ணன் பார்த்திருப்பதும் தப்பு
பொறுமை இழப்பதும் தப்பு

மூத்தவன் கடமை
அறியா தம்பிக்கு 
உண்மை அறியச் செய்வதே தவிர
அறிவிழந்து அடித்து நோறுக்குவதல்ல 

முல்லை பூ நதி
அவளை நட்புக்கு நடுவே
முள்வேலியாக்கிவிடாதீர்
புரிய  வைப்போம்
இருக்கும் அனைகொண்டே
நீரோடு அன்பையும்
பகிர்ந்துண்போம்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்