Thursday, January 12, 2012

ஆதாம் ஏவாள் குற்றம்
























காதல் ஒருவரம்
      உயிர்  போகும்
      தவம் வேண்டும் இதற்கு


தவமின்றி
      சிலருக்கு  இங்கே
      கிட்டிடையில் அருமை
       இழந்து போகுது வரம்

அர்த்தமில்லாத சண்டைகள்
        காரணம் கேட்டால்
        சண்டை இல்லை அது
        இலக்கியம் சொல்லும்
        ஊடல் இது என்கிறது
       முட்டாள் தனம்

தேவை இல்லா சந்தேகங்கள்
        சொன்னால்
        சந்தேகம் இல்லை அது
        காவியம் சொல்லும்
        தன்னுடமை காக்கும்
        காதல் பதற்றம் என்கிறது
        முட்டாள்தனம்

 பசியில் உலகம் போராடும்வேளையிலும்
        குப்பைத் தொட்டியில் வீணாகும் உணவு
        குறையாதது போல்

உண்மைக் காதல்கள் ஒருதலையில் நின்று இறக்கும் நிலையிலும்
         கிடைத்த காதலை
         இல்லாத காரணம் சொல்லி
         கொன்றுக் குவிக்குது
         உண்மைக் காதலே        

காதலோன்றும் பிறவிக் குருடல்ல
          காதலர்களால் குருடாக்கப்படுகிறது
       
காதல் சிவம் என்றால்
        குருடான சிவனுக்கு
        கண் கொடுக்க
        அறிவுக் கண்ணப்பன்
         என்று வருவான்!
          

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்