Tuesday, January 24, 2012

உயரும் அடி


























பாரதியும் பாவேந்தர்களும்
     விரும்பிய பெண்ணுயர்வு
     இது தானோ?

கனுக்கால் தொடும்
     கூந்தல்கள் காணாமல்
     போனதாலே...
     எஞ்சி நிற்கும் கூந்தலை
     எக்கி எட்டும் முயற்சியோ?

எட்டாத தூரத்தில்
    நிற்கும் மரணத்தை
    விரைவாய் தொட்டுப்
    பார்க்கும் ஆசையோ?


இந்த ஒய்யார
    முக்காலியில் உட்காரயில்தான்
    உங்கள் பாதக் குழந்தைகள்
    ஓய்வை இழக்கும்....
    எலும்புகள் சோர்ந்து போகும்
இந்த உயரத்திலிருந்து
    விழாமலே
    உங்கள் பட்டு எலும்புகள்
    நொறுங்கிப் போகும்...

அழகே  ஆகினும்
    அளவாய் வேண்டும்
    வாழ்வும் வளமாய்
    நீளும்


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்